புதியவை :

Grab the widget  Tech Dreams

26 அக்டோபர் 2009

லஞ்சத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் , பீகார் கலெக்டர் களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் கட்டளை .


பாட்னா : "மக்களை பாதிக்கும் மிகவும் மோசமான தொற்றுநோய் லஞ்சம்; இதை வாங்குவோர் யாராக இருந்தாலும், இரவு கண் விழித்தாவது பிடிக்க வேண்டும்; லஞ்சத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும்' என்று பீகார் கலெக்டர் களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் கட்டளை போட்டுள்ளார்.

பீகாரில், பதினைந்தாண்டாக கோலோச்சிய லாலு - ரப்ரி ஆட்சியை விரட்டி பிடித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி, அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க இன்னும் 13 மாதங்கள் உள்ளன.நிதிஷ் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என்றாலும், லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. மக்களை மிகவும் பாதிக்கும் இதை ஒழித்துக்கட்ட சபதம் எடுத்துள்ள அவர், கடந்த வாரம், கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விரிவாக ஆலோசித்தார்.மக்களின் குறைகளை கேட்க விகாஸ் யாத்ரா என்ற பெயரில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார் நிதிஷ். அப்போது, லஞ்சம் தொடர்பாக
அவரிடம் புகார் மனுக்கள் குவிந்தன.பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், முதல்வரின் முதன்மைச் செயலர் உட்பட மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிதிஷ் பேசியதாவது:கிராம மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களில் அதிகாரிகள் ஊழல் செய்வதால், மக்களை குறைந்தபட்ச பலன் கூட போய்ச்சேருவதில்லை. இதை ஒழித்துக்கட்ட இரவு - பகல் பாராமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.மாவட்ட கலெக்டர்கள், கிராமங்களுக்கு சென்று ஊழல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். மக்களிடம் இருந்து பெறப்படும் லஞ்ச புகார்கள் குறித்து உடன் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும்.மாவட்டங்களில் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கபப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று தணிக்கை செய்யவேண்டும்.இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தலைமைச் செயலர் கூறுகையில், "யாரேனும் லஞ்சம் வாங்கி கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஊழலை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர பீகார் அரசு முடிவு செய்தது. இதன்படி, மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து சொத்துகள் சேர்த்த அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது போல் நமது தமிழ் நாட்டிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு செயல் படுத்தப் பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக