புதியவை :

Grab the widget  Tech Dreams

13 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய மறைமலைநகர் நகராட்சி இளநிலை பொறியாளர் நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டார் .


மறைமலைநகர்: சிமென்ட் சாலை அமைத்ததற்கு செக் பாஸ் செய்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் தலைமை எழுத்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மறைமலைநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். நகராட்சி கான்ட்ராக்டர். இவர் நகராட்சியில், 31 லட்சத்து 50 ஆயிரத்திற்கான சாலை பணிகளை செய்து முடித்தார். பணி முடித்தபிறகு 4 செக்குகள் மூலம் 21 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மீதி தொகையினை 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்க, நகராட்சி இளநிலை பொறியாளர் நந்தகுமார்(38) 20 ஆயிரம் ரூபாயும், நகராட்சி தலைமை எழுத்தர் ஜானகிராமன்(48) 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டன

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியம் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு எஸ்.பி., புவனேஸ்வரியிடம் புகார் செய்தார். இதையடுத்து, அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் நகராட்சி அலுவலகத்தில் இருந்த இருவரிடமும் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சம்பந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய் ஆனந்தன், கந்தசாமி மற்றும் போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக