புதியவை :

Grab the widget  Tech Dreams

22 அக்டோபர் 2009

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை


புதுதில்லி, அக்.22: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக தில்லியிலுள்ள தொலைத்தொடர்பு அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) இன்று சோதனை நடத்தியது.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று தில்லியிலுள்ள சஞ்சார் பவன் அலுவலங்களில் இன்று சோதனை நடத்தியது. முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதைக் கண்டறிய புதிய நிறுவனங்களுக்கு ஸ்பெட்க்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான கோப்புகள் அனைத்தையும் சிபிஐ தீவிர பரிசீலனை செய்யும் எனத் தகவல்கள் தெரிவித்தன.சோதனை தொடர்பாக தொலைத்தொடர்பு அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.ரூ 1,651 கோடிக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டதில் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டதாக தொலைத்தொடர்பு துறைக்கு எதிராக மத்திய கண்காணிப்பு ஆணையம் புகார் தெரிவித்தது. இந்நிலையில் தொலைத்தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக