புதியவை :

Grab the widget  Tech Dreams

30 செப்டம்பர் 2009

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ பஞ்சநாதன் ., கைது

திருப்புத்தூர்: பட்டா மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதன் கைது செய்யப்பட்டார். திருப்புத்தூர் அருகிலுள்ள சேவினிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (70). இவருக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை மருமகள் உலகி பெயருக்கு, திருப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.

இந்நிலத்திற்கான பட்டா மாறுதலுக்கு உலகி, சகோதரர் ராசுவுடன் வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதனிடம் மனு கொடுத்தார். அவர் பட்டா மாறுதலுக்கு ரூ. ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என இருவரும் கூறினர். முதல் தவணையாக ரூ.1,500 கொடுங்கள், மீதி தொகையை பட்டா வந்த பின் தாருங்கள்' என பஞ்சநாதன் கறாராக கூறினார். இது குறித்து ராசு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தந்தார்.

போலீசார் யோசனைப்படி நேற்று மாலையில் பஞ்சநாதனிடம் ரூ.1,500 ஐ ராசு லஞ்சமாக கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., குமாரசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன்,ராஜா குழுவினர், கையும் களவுமாக பஞ்சநாதனைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக