புதியவை :

Grab the widget  Tech Dreams

04 செப்டம்பர் 2009

கல்வித்துறை அதிகாரி மாணிக்கவேல் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே, பணி நிரந்தரம் செய்ய, தற்காலிக ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மயிலாடுதுறை அடுத்த பாகசாலை டி.இ.எல்.சி., பள்ளியில், குருபாத நீதிராஜ் என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது தந்தை தியாகராஜன் தரங்கம்பாடி டி.இ.எல்.சி., துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.

குருபாத நீதிராஜை பணி நிரந்தரம் செய்ய, செம்பனார்கோவில் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கவேல், அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் ரூபாயும், தனக்கு 50 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று முன்தினம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் படி குருபாத நீதிராஜை கட்டாயப்படுத்தியுள்ளார்மாணிக்கவேல்.
குருபாத நீதிராஜின் தந்தை தியாகராஜன், நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் வழிகாட்டுதல் படி, தியாகராஜன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கவேலுவிடம் தற்போது 50 ஆயிரம் ரூபாய் தர இயலாது. 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, தரங்கம்பாடி டி.இ.எல்.சி., பள்ளிக்கு மாணிக்கவேலுவை வரவழைத்துள்ளார்.
இரவு 8.30 மணிக்கு தரங்கம்பாடி டி.இ.எல்.சி., பள்ளிக்கு வந்த மாணிக்கவேல், தியாகராஜனிடமிருந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை வாங்கி அறையைவிட்டு வெளியே வந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. மாணிக்கவாசகம் தலைமையிலான போலீசார், மாணிக்கவேலுவை கைது செய்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து இரவு 1 மணிவரை தீவிர விசாரணை செய்ததில், உயரதிகாரிகளுக்காக பணம் வாங்கியதாக மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக