புதியவை :

Grab the widget  Tech Dreams

23 செப்டம்பர் 2009

கரூர் அருகே ரூ.700 லஞ்சம் வாங்கிய கிராம பெண் அதிகாரி சுப்புலட்சுமி கைது


கரூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் பாலன். விவசாயி. இவர் வீட்டு மனைபட்டா மாற்ற கோரி கிராம அதிகாரி சுப்புலட்சுமியிடம் விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது சுப்புலட்சுமி பட்டா மாற்றுவதற்கு ரூ.700 லஞ்சம் தரவேண்டும் என்றார்.

லஞ்சம் பணம் கொடுக்க விரும்பாத பாலன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.

போலீசாரின் அறிவுறையின்படி விவசாயி பாலன் இன்று காலை கரூரில் உள்ள கிராம அதிகாரி சுப்புலட்சுமி வீட்டுக்கு சென்றார்.

அவரிடம் ரூ.700 லஞ்ச பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பு லட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக