புதியவை :

Grab the widget  Tech Dreams

26 செப்டம்பர் 2009

அரசு ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய சார் நிலை கருவூல காசாளர் கைது .


செஞ்சி: ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க, லஞ்சம் கேட்டதாக செஞ்சி சார் நிலை கருவூல காசாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக வேலை செய்பவர் மதியழகன்.


இந்த அலுவலத்தின் மூலம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆறு பேருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஒரு லட்சத்து மூன்று ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, செஞ்சி சார் நிலை கருவூலத்தில் தயார் நிலையில் இருந்தது. காசோலையை வழங்க, கருவூல காசாளர் ஞானசேகரன் மதியழகனிடம் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் மதியழகன் புகார் செய்தார்.


லஞ்சப்பணத்தை மதியழகன் கொடுக்கும் போது வெளியே காத்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் ஞானசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்த ஞானசேகரனை, விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதுவரை, லஞ்ச வழக்குகளில் பொதுமக்கள் புகார் கொடுப்பது வழக்கம். முதன் முறையாக, அரசு அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவரே, மற்றொரு அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக