புதியவை :

Grab the widget  Tech Dreams

23 செப்டம்பர் 2009

லால்குடி அருகே வாரிசு சான்றுக்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ராதா கைது


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பம்பரம்சுத்தி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராதா(வயது52). அதே ஊரை சேர்ந்தவர் நவ்ரளி. இவரது தந்தை இறந்து விட்டதால் அதற்கு வாரிசு சான்றிதழ் கேட்டு ராதாவிடம் விண்ணப்பித்து இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க தனக்கு ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று ராதா கேட்டார்.
இதைத் தொடர்ந்து நவ்ரளி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் போலீசார் அங்கு சென்று மறைந்து இருந்தனர். போலீசார் கொடுத்த ரூ.500ஐ நவ்ரளி அதிகாரி ராதாவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக ராதாவை கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக