புதியவை :

Grab the widget  Tech Dreams

25 செப்டம்பர் 2009

ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ - மணிவண்ணன் கைது .






கள்ளக்குறிச்சி: சொத்து மதிப்புச் சான்று பெற, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் திருக்கணங்கூரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுபவர் மணிவண்ணன்.

இவரிடம், திருக்கணங்கூர் காட்டுக்கொட்டகையில் வசிக்கும் ரவிக்குமார், கடந்த இரு தினங்களுக்கு முன், சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டார். வி.ஏ.ஒ., மணிவண்ணன், 2,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கூறினார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, ரவிக்குமார் தகவல் கொடுத்தார். போலீசார் அறிவுரையின்பேரில், நேற்று மதியம் 1.45 மணிக்கு கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள வி.ஏ.ஓ., வீட்டிற்குச் சென்று, 2,000 ரூபாய் பணத்தை கொடுத்தார். டி.எஸ்.பி., சுதர்சன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி, ஏட்டு ரவி ஆகியோர் லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக வி.ஏ.ஓ., மணிவண்ணனை கைது செய்து, விழுப்புரத்திற்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக