புதியவை :

Grab the widget  Tech Dreams

30 செப்டம்பர் 2009

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடிகளில் ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடியைச் சேர்ந்த போலீசார் வாகனங்களில் வருவோரிடம், போக்குவரத்து விதியை மீறியதாக கூறி பணவசூல் வேட்டை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அந்த சோதனை சாவடிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

இதுபற்றி அங்கிருந்த போலீசாரிடம் கேட்டபோது, இது எங்கள் பணம் இல்லை. யார் பணம் என்றே தெரியாது என்று மறுத்தனர். இதையடுத்து அந்த சாவடியில் பணியாற்றும் 10 போலீசாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக