புதியவை :

Grab the widget  Tech Dreams

23 செப்டம்பர் 2009

மணவாளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு சுப்ரமணியம் கைது.

குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சியை அடுத்த கருங்காலிவிளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 52). வியாபாரி. இவரது மகள் நிஷா(22) சென்னையில் போலீசாக வும், மகன் சுமன் (21) உத்திர பிரதேசத்தில் ரெயில்வே போலீசாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நிலப்பிரச் சினை தொடர்பாக சுயம்பு லிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடியபட் டணத்தை சேர்ந்த வாலண் டின்மேரி(53) என்ற பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண் டிடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில் எஸ்.பி. உத்த ரவுபடி மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்து இருதரப்பி னரையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு சுப்ரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சுயம்புலிங்கத்தை தொடர்பு கொண்டு அந்த வழக்கு இன்னும் முடிய வில்லை. எனவே உங்களின் மகனும், மகளும் வரும் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி சுயம்புலிங்கம் போலீஸ் நிலையம் சென்று ஏட்டு சுப்ரமணியத்தை பார்த்து எனது மகனும், மகளும் இப்போது வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என கூறினார்.


உடனே ஏட்டு சுப்பிரமணியம் “அப்படியென்றால் ரூ.2 ஆயிரம் கொடு. உன்மகன், மகள் இங்கு வரவேண்டாம். வழக்கை முடித்து விடுகிறேன்” என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுயம்புலிங்கம் ரூ.1000 தருவ தாக கூறவே சுப்பிரமணியம் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து சுயம்புலிங்கம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயணபொடி தடவிய ரூ.1000-த்தை சுயம்புலிங்கம் நேற்று மாலை சுப்பிரமணி யத்திடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக