புதியவை :

Grab the widget  Tech Dreams

24 செப்டம்பர் 2009

இந்திய உணவு கழகத்தில் லஞ்சம்

சென்னை: இந்திய உணவு கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சப் பணத்தை கம்ப்யூட்டர் அறையில் ஒளித்து வைத்த அலுவலக உதவியாளர் சீனிவாசன் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவுக் கழக பொது மேலாளர் ஜெயக்குமார் அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ., தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். அதில், லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் சிக்கியது. துணை பொது மேலாளர் துரைராஜ் உட்பட உணவுக் கழக அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். கிரீம்ஸ் சாலையில் சி.பி.ஐ., தனிப்படையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, லஞ்சப் பணத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் பணத்தை மறைத்துவைத்த தகவல் சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் எட்டு பேர் மீது வழக்கு தொடர்ந்த சி.பி.ஐ., போலீசார், அவ்வழக்கில் சீனிவாசன் பெயரையும் தற்போது சேர்த்துள்ளனர். பொது மேலாளர், துணை மேலாளர் "பை-பாஸ்' ஆபரேஷன் செய்தவர்கள் என்பதால் மருத்துவமனையில் "அட்மிட்' ஆகினர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினால், சி.பி.ஐ., போலீசார் கைது செய்யக் கூடும் என்பதால், தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய உணவுக் கழக அதிகாரிகள் ஒன்பது பேரையும், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் நேற்று பிற்பகல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக அளவில் இந்திய உணவுக் கழகத்தில் புரோக்கர்களை நியமித்து லஞ்சம் வாங்கிய, "டாப் 9' அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக