தர்மபுரி: தர்மபுரி அருகே 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கேத்துரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(52).
கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி டேங்க் ஆபரேட்டர். இவருக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, நிலுவைத் தொகை வர வேண்டியிருந்தது. நிலுவைத் தொகையை வழங்கும்படி, ஊராட்சி உதவியாளர் சரவணனிடம்(34) கோபாலின் மகன் தர்மராஜ்(31) கேட்டுள்ளார். அதற்கு சரவணன், இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். 1,500 ரூபாய் தருவதாக தர்மராஜ் ஒப்புக்கொண்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தர்மராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, நேற்று ஊராட்சி அலுவலகம் சென்ற தர்மராஜ், சரவணனிடம் 1,500 ரூபாய் பணம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சரவணனை கைது செய்தனர்.
24 செப்டம்பர் 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக