பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேத்துவட்டிப்பட்டி ஊராட்சியில் உதவியாளராக இருப்பவர் சரவணன் (வயது 34). இதே பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீர் திறப்பாளராக கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
கோபாலுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வந்தது. அந்த தொகைக்காக காசோலையை கேட்டபோது ஊராட்சி உதவியாளர் சரவணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூ. 1500 பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து கோபால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்று காலை கோபால், ஊராட்சி உதவியாளர் சரவணனுக்கு ரூ. 1500 லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் ஆகியோர் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
1 1
26 செப்டம்பர் 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக