புதியவை :

Grab the widget  Tech Dreams

26 செப்டம்பர் 2009

நண்டலாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை.

பொறையாறு, செப். 26: நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள நண்டலாறு காவல் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டதில் ரூ.4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

பொறையாறு அருகே நண்டலாற்றுப் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எல்லையையொட்டி, காவல் சோதனைச் சாவடி உள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, அதிகமான வாகனங்கள் இந்த எல்லையைத் தாண்டி செல்லும் போது, அந்த வாகனங்களை சோதனைச் சாவடியில் நிறுத்தி கட்டாய வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை ஆய்வுக் குழு அலுவலர் மதுரம், நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மாணிக்கவாசகம், ஆய்வாளர் சித்திரவேல் ஆகியோர் நண்டலாறு சோதனைச் சாவடியில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பணியிலிருந்த திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், பொறையாறு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ், தலைமைக் காவலர்கள் நாராயணசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டைப் பை, மோட்டார் சைக்கிள் டேங்க் கவர் ஆகியவற்றிலிருந்து ரூ. 4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அங்கு சோதனை செய்ததில், வாகனத் தணிக்கையின்போது பதிவு செய்யப்படும் போலீஸ் நோட்டீஸýகளை நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர். சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக