புதியவை :

Grab the widget  Tech Dreams

26 செப்டம்பர் 2009

போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன்

எண்ணூர் : ஷேர்ஆட்டோக்களில் அபராதத்திற்கு மேல் "கெடு பிடி' வசூலித்த போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கினர்.
சென்னையை அடுத்த எண்ணூர், மணலி, மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஷேர்ஆட்டோக்களில் கெடு பிடி வசூல் நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், மாறுவேடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன், தலைமை காவலர்கள் சுந்தர், அருணாச்சலம் ஆகியோர் அப ராத கட்டணத்துடன் கூடுதலாக வசூல் செய்தனர். அவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக