புதியவை :

Grab the widget  Tech Dreams

25 செப்டம்பர் 2009

ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு பெற சான்றிதழ் வழங்க, 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55); குருபரப்பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார்.

தற்போது, மாரசந்திரம் வி.ஏ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். மாரசந்திரத்தை அடுத்த குரல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயவேலன் (27). இவர், தனக்கு சொந்தமான விவசாயக் கிணறுக்கு, மின் இணைப்பு பெற சான்றிதழ் வேண்டி, வி.ஏ.ஓ., கோவிந்தராஜிடம் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கோவிந்தராஜ் கேட்டதற்கு, 3, 500 ரூபாய் தருவதாக ஜெயவேலன் ஒப்புக்கொண்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயவேலன், இதுகுறித்து, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி,ஜெயவேலன் நேற்று முன்தினம் இரவு, கட்டிகானப்பள்ளியில் உள்ள வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்று, அவரிடம் 3,500 ரூபாய் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக