புதியவை :

Grab the widget  Tech Dreams

23 செப்டம்பர் 2009

கோவை ஊழியர்களிடம் லஞ்சம்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 4 பேர் கைது .

கோவை கோபாலபுரத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு 34 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு சம்பள நிலுவை தொகையாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகையை ஊழியர்களுக்கு 2 மாதத்திற்கான நிலுவை தொகையை மட்டும் வழங்கி விட்டு 6 மாதத்தொகையை உயர் அதிகாரிகள் சிலர் அபகரித்துள்ளனர்.

இது குறித்து ஊழியர்கள் சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சண்முகபிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞான சேகரன், சுந்தராஜன், கருணாகரன், ஜெரால்ட் ஆகியோர் அடங்கிய குழு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீர் என சோதனை நடத்தியது.

அப்போது சங்க துணை பதிவாளர் நாகராஜு 2 லட்சமும், தனி அலுவலர் ரத்தினசபாபதி 1 லட்சமும், கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் நாமக்கல் கிளை மேலாளருமான முருகேஸ் 3 லட்சம் என 6 லட்சத்தை பிரித்து வைத்திருந்தனர். அந்த 6 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஈரோடு மாவட்டம் இலவமலை வீட்டு வசதி கூட்டுறவு சங்க செயலாளர் சக்திகனகரத்தினம் என்பவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக