புதியவை :

Grab the widget  Tech Dreams

23 செப்டம்பர் 2009

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சாப்பாடு சீட்டு கொடுக்க லஞ்சம் வாங்கிய ஊழியர் ரகசிய காமிரா மூலம் சிக்கினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பல்வேறு மாவட்டங்களில் விபத்தில் சிக்குபவர்களும் இங்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பொதுமக்களிடம் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

இதை சில ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆஸ்பத்திரி ஊழியர் போல் வார்டுகளுக்குள் சென்று அங்கு நோயாளிகளின் செல்போன், பணம் ஆகியவற்றை திருடி சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் பணம் தந்தால்தான் சிகிச்சைக்கு உதவுவோம் என கூறி பணம் பறித்து வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சில ஊழியர்களைகையும், களவுமாக பிடித்தனர். ஆனாலும் லஞ்சம் குறைந்தபாடில்லை. இதனால் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்திலேயே முதல் முதலாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 32 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த காமிரா அனைத்தும் ஒருங்கிணைந்து டீன் அறையில் உள்ள திரையில் தெரியும்படி இணைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.

இந்த வெள்ளோட்டத்தின் போது உணவு சீட்டு வழங்க நோயாளிகளிடம் ஊழியர் ஒருவர் ரூ.20 லஞ்சம் பெற்றது. காமிராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த ஊழியரை டீன் சிவகுமார் அழைத்து கண்டித்தார். பின்னர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல் அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய ஊழியர் ஒருவர் 18 முறை லஞ்சம் வாங்கியது பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.

இன்னொரு காட்சியை பார்க்கும்போது சமையல் அறையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஆம்ப்லேட் போட்டு சாப்பிட்டதும் பதிவாகி இருந்தது.

லஞ்சம் வாங்கும் பேர் வழிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த ரகசிய காமிராக்கள். இதில் சிக்குபவர்களை எந்த விசாரணையுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக