புதியவை :

Grab the widget  Tech Dreams

30 செப்டம்பர் 2009

ரூ. 10 ஆயிரம் லஞ்சம் - விவசாயத் துறை அலுவலக ஆடிட்டர் நாகராஜன்,உதவியாளர் வெங்கடாசலம் கைது.

சென்னை, செப். 30-

சென்னை சேப்பாக்கம் வேளாண்துறை மண்டல தணிக்கை அலுவலகத்தில் ஆடிட்டராக இருப்பவர் நாகராஜன் (53). இவரது உதவியாளர் வெங்கடாசலம்.

சில நாட்களுக்கு முன்பு நாகராஜன் சிட்லபாக்கத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வெங்கடாசலத்துடன் சென்றார். அப்போது அவர் தணிக்கை செய்தபோது அம்மையத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அவர், மைய பொறுப்பாளர் ரகுராமனிடம் சென்று உங்கள் மையத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்றார். இதற்கு ரகுராமன் சம்மதித்தார்.

பின்னர் ரகுராமன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகுராமனிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அவர் அந்த நோட்டுக்களை உதவியாளர் வெங்காசலத்திடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து வெங்கடாசலம், நாகராஜனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக