புதியவை :

Grab the widget  Tech Dreams

25 செப்டம்பர் 2009

திருவண்ணாமலை மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் கைது .

திருவண்ணாமலை: பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் புதிய மண் பாடி லாரி ஒன்றை வாங்கினார்.

இதை பாடி கட்டி, "ரிஜிஸ்ட்ரேஷன்' செய்யாமல் கடந்த ஓராண்டாய் லாரியை வாடகைக்கு விட்டு வந்தார். இது குறித்த தகவல் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரனுக்கு நேற்று முன்தினம் தெரிந்தது. லாரியை நேற்று முன் தினம் இரவுகண்ணனின் லாரியில் மணல் லோடு ஏற்றி சென்றபோது குணசேகரன் பறிமுதல் செய்தார். அப்போது, குணசேகரன், ""50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்பதாகவும், வாகன பதிவு செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக,'' கண்ணனிடம் தெரிவித்தார்.

கண்ணன் லாரியில் இருந்த மணலை இறக்கவிட்டு லாரியை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு வருவதாக கூறிவிட்டு முதல் தவணையாக 15 ஆயிரம் ரூபாயை குணசேகரனிடம் கொடுத்தார். இரண்டாவது தவணையாக 10 ஆயிரம் ரூபாயைநேற்று கொடுப்பதாக கூறினார். கண்ணன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி கண்ணன் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த குணசேகரனிடம் 10 ஆயிரத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.

குணசேகரன் வீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் உள்ளது. அவரது வீட்டை சோதனை நடத்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்ட குழுவினர் நேற்று சாமல்பட்டியில் உள்ள குணசேகரன் வீட்டை ஆர்.ஐ., சேகர் மற்றும் வி.ஏ.ஓ., முன்னிலையில் சோதனை நடத்தின

ர். அப்போது, குணசேகரன் மத்தூர் யூனியன் நாராலப்பள்ளி ஒன்னக்கரை பகுதியில் 40 ஏக்கர் நிலம் வாங்கி மாந்தோட்டம் அமைத்திருப்பதும், குணசேகரின் மனைவி சாந்தி பெயரில் சாமல்பட்டியில் பழைய திருமண மண்டபத்தை விலைக்கு வாங்கியிருப்பதும் தெரிந்தது. சமீபத்தில் ஸ்கார்பியோ, இன்டிகா என இரு கார்கள் வாங்கியிருப்பதும், அவரது மகன் மற்றும் மகளை 20 லட்சம் ரூபாய் கொடுத்து டாக்டர் படிக்க சேர்த்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு சொத்து மற்றும் ரொக்க பணம், நகை உள்ளிட்ட விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்தனர். அது குறித்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக