புதியவை :

Grab the widget  Tech Dreams

22 அக்டோபர் 2009

60 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை


பெரம்பலூர் : இறப்பு சான்றிதழ் பெற்றுத்தர ரூ. 60 லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியைச் சேர்ந்த சின்னையன் என்பவர், தனது மனைவி பார்வதியின் இறப்பு சான்றிதழைப் பெற குன்னம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அங்கு பணியாற்றும் பதிவு எழுத்தர் சந்திரசேகர் என்பவர், அந்த சான்றிதழை பெற்றுத்தர ரூ. 60 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத சின்னையன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் படி, சின்னையன் பணம் தர அதைப்பெற்றுக்கொண்ட சந்திரசேகர் மற்றும் அவரது உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சரோஜினி இன்று தீர்ப்பு வழங்கினார். இதன்படி சந்திரசேகருக்கு ஒன்றரை ஆண்டுகளும், வெங்கடாசலதிற்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 கருத்து: