புதியவை :

Grab the widget  Tech Dreams

30 அக்டோபர் 2009

லாரி டிரைவரிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது







அக். 30
மணப்பாறை பகுதியில் கடந்த 16-10-09 அன்று சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் புத்தாநத்தம் மின்வாரிய போர்மேன் கிருஷ்ணன்- சுக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். ஆறுமுகம் கோவையில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் ஆறுமுகம் (வயது36) மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி ரூ.1500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த லாரி டிரைவர் ஆறுமுகம் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் செய்தார். அவரது திட்டப்படி இன்று காலை ரூ.1500ஐ ஆறுமுகம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாத்தியிடம் கொடுத்தார்.
அதை அவர் வாங்கிய போது போலீஸ் நிலையம் அருகே மறைந்திருந்த டி.எஸ்.பி. அம்பிகாபதி, இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், சூரகுமரன். கோவிந்தசாமி, பிரசன்ன வெங்டேஷ் ஆகியோர் கையும் களவுமாக ராஜாத்தியை கைது செய்தனர்.



1 கருத்து:

  1. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Probe+against+women+panel+chief&artid=0WSMUJXhlBU=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=&SectionName=rSY|6QYp3kQ=
    Dr K M Ramathal, chairperson of Tamil Nadu State Commission for Women, had allegedly used abusive language and reportedly demanded bribe of Rs 5 lakhs to drop a complaint made against Hema Ramakrishan (43) by her husband Ramakrishanan and her mother-in-law on October 1. Though it all looks like a storm in a tea cup, Hema suspects there is a political angle to it.

    பதிலளிநீக்கு