புதியவை :

Grab the widget  Tech Dreams

30 ஜூன் 2010

ரூ.80 லட்சம் மோசடி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் மனைவியுடன் கைது.


தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது நண்பர் ராஜசேகர், அவரது மனைவி ஹேமா ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி என்னிடம் ரூ.6 லட்சம் வாங்கினர்.

இதேபோல எனது நண்பர் கள் 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளனர். மொத்தம் ரூ.80 லட்சம் வசூல் செய்த அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து லாபம் தருவதாக கூறினர். ஆனால் லாபத்தொகை எதுவும் தரவில்லை.

பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் விசாரணை நடத்தினர். திருவேற்காட்டில் தங்கி இருந்த ராஜசேகர், ஹேமா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயரான ராஜசேகர், ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் எம்.சி.ஏ. முடித்துள்ள தனது மனைவி ஹேமாவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி ஏமாற்றியதாக விசாரணை யில் தெரியவந்தது.

கைதான இருவரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.




2 கருத்துகள்: