புதியவை :

Grab the widget  Tech Dreams

01 ஜூன் 2010

ரூ.2 ஆயிரம் லஞ்சம் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன்கைது .


ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ பர்மிட்டுக்காக 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த பாலு பிள்ளை மகன் செந்தில். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தன்னுடைய ஆட்டோவை எல்.பி.ஜி., காஸ் ஆட்டோவாக மாற்ற, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., (வட்டார போக்குவரத்து அதிகாரி)விடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், புரோக்கர் அப்துல் ஜலீலை பார்க்க கூறினார். "பர்மிட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என, புரோக்கர் கூறியதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனையின்படி, நேற்று மதியம் 12 மணிக்கு புரோக்கர் அப்துல் ஜலீல் மூலம், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் செந்தில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், புரோக்கர் மற்றும் ஆர்.டி.ஓ.,வை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களை கைது செய்து, திருச்சி அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக