புதியவை :

Grab the widget  Tech Dreams

22 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கொம்பையன் கைது.


ஈரோடு: லாரி உரிமையாளரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர், கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவை சேர்ந்த ஆனந்தகுமார் (32), சொந்தமாக லாரி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து தெங்குமரஹடா செல்லும் வழியில், சுஜில்குட்டை வனச்சோதனை சாவடி உள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையன் (43) வனக்காப்பாளராக பணிபுரிகிறார்.

கடந்த 20ம் தேதி, தெங்குமரஹடாவிலிருந்து இலவம் பஞ்சு லோடு ஏற்றி வந்த ஆனந்தகுமாரிடம், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், "அடுத்த முறை பணம் தரவில்லையெனில், இரவு நேரத்தில் வனத்துக்குள் வண்டி ஓட்டிச் சென்றதாக வழக்கு போட்டு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து விடுவேன்' என, கொம்பையன் மிரட்டியுள்ளார்.

ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் நேற்று, ஆனந்தகுமார் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, நேற்று மதியம் சுஜில்குட்டை வழியாக லாரியை ஓட்டிச் சென்ற ஆனந்தகுமார், வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த கொம்பையனிடம், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். கொம்பையனை கையும், களவுமாக பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக