புதியவை :

Grab the widget  Tech Dreams

02 ஜூன் 2010

கைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்வாளர் கைது


ஈரோடு : கைத்தறி உரிமையாளரிடம் 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் மற்றும் கைத்தறி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (53), ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனராக உள்ளார். ஈரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கி பணிபுரிகிறார். பவானியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(43), கைத்தறி ஆய்வாளராக உள்ளார்.

ஈரோடு திண்டலைச் சேர்ந்த கோதண்டராமலிங்கம் (45), 24 தறிகளை வைத்து, சொந்தமாக தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், அரசின் நலத்திட்ட உதவி மூலம், விசைத்தறியாளர்கள் நலச்சங்கம் நிறுவ எண்ணினார். ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் விஜயகுமாரை, கோதண்டராமலிங்கம் சந்தித்தார். 3.50 லட்ச ரூபாய் லஞ்சமும், முன்பணமாக 25 ஆயிரம் ரூபாயும் தருமாறு விஜயகுமார் கேட்டார். மே 21ம் தேதி, 5,000 ரூபாய் கொடுத்த அவர், பாக்கித் தொகையை, நேற்று தருவதாக இருந்தது.

இதுபற்றி கோதண்டராமலிங்கம், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, தகவல் தெரிவித்தார். உதவி இயக்குனர் விஜயகுமாரிடம், கோதண்டராமலிங்கம் பணம் கொடுக்கும் போது, ஈரோடு லாட்ஜில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மற்றும் போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த தட்சிணா மூர்த்தியையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த, கணக்கில் வராத 81 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். கோவையில் இருக்கும் உதவி இயக்குனர் விஜயகுமாரின் வீட்டில் சோதனையிட, ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர், கோவை சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக