புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைது


சென்னை : மின் இணைப்பு கொடுப்பதற்கு 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னையைடுத்த, நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் வெங்கடநாராயணன்(62); டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வெங்கடநாராயணன், தன் வீட்டில் ஏற்கனவே இருந்த இருமுனை மின் இணைப்பை மாற்றி, மும்முனை இணைப்பை பெற, நங்கநல்லூரில் உள்ள மின்வாரியத்திற்கு கடந்த 3ம் தேதி சென்றுள்ளார். அங்கு உதவி இன்ஜினியராக பணிபுரிபவர் வெங்கடேசன்(50). இவர் மும்முனை இணைப்பை வழங்க 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் வெங்கடநாராயணன் புகார் செய்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று வெங்கடநாராயணன், வெங்கடேசனிடம் 3,500 ரூபாய் லஞ்சப் பணத்தை வழங்கினார். இதற்காக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., நடராஜன் தலைமையிலான அதிகாரிகள், வெங்கடேசனை கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக