புதியவை :

Grab the widget  Tech Dreams

08 ஜூன் 2010

அமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர் கைது



உடுமலை : "செய்தி போட்டு மானத்தை வாங்கிவிடுவேன்' என அமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபரை அமராவதி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அமராவதி வனச்சரகர் ஜெயராமன் அமராவதி நகர் போலீசில் கொடுத்த புகார் மனு: உடுமலையை சேர்ந்த மணி வார இதழில் பணியாற்றி வருவதாக கூறிக்கொண்டு, அடிக்கடி வனச்சரக அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு வேண்டிய நபருக்கு சிபாரிசு செய்தும், அந்த சிபாரிசை ஏற்க மறுத்ததால் செய்தி வெளியிடுவதாக மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.


இந்நிலையில், மே 31ம் தேதி, மாலை 3.00 மணிக்கு, வனச்சரக அலுவலகத்தில் ஊழியர்களுடன் இருந்த போது, சந்தனக்கட்டை கடத்திய நபர்களுக்கு உடந்தையாக உள்ளதாக உங்கள் மீது புகார் உள்ளது. பத்தாயிரம் பணம் தரவில்லையென்றால் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டி வருகிறார். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை செய்த அமராவதி நகர் போலீஸ் துணை ஆய்வாளர் சுப்பையன் ,தலைமை காவலர் குரு ஆகியோர், ...,385 (அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 452 (மிரட்டுதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் (எண் 116/10) வழக்கு பதிவு செய்தனர்.

மணியை கைது செய்து, ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே நிருபர் மணி ஏற்கனவே பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு வழக்கு உடுமலைபேட்டை தளி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக