புதியவை :

Grab the widget  Tech Dreams

16 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் லஞ்சம் வாங்கிய ஆறு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பிறப்பு முதல் இறப்பு வரை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதேபோல் ஸ்டிரெச்சர் தள்ள, வீல்சேரில் அழைத்துச் செல்ல, மாவுக்கட்டு கட்ட என ஒவ்வொன்றுக்கும் ஊழியர்கள் விலை நிர்ணயித்துள்ளனர்.

கடந்த மார்ச், மே மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 2ல் நடத்திய சோதனையில் 8 பேர் சிக்கினர். இவர்களிடமிருந்து 3000 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது.

மார்ச் 18ல் மீண்டும் சோதனை நடத்தியதில் மூன்று பேர் பிடிபட்டனர். ஜூன் 3ல் நடத்தப்பட்ட சோதனையில், பிடிபட்ட இரு பெண் ஊழியர்களிடமிருந்து 1470 ரூபாயும், துப்புரவு தொழிலாளர்களிடமிருந்து 515 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், ஆறு பேர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சில நாட்களுக்கு முன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு லஞ்சஒழிப்பு போலீசார் பரிந்துரைத்தனர். இதுகுறித்து சிவக்குமார் நமது நிருபரிடம் கூறுகையில், ""சம்பந்தப்பட்ட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக