புதியவை :

Grab the widget  Tech Dreams

21 ஜூன் 2010

லஞ்சம் :தர்மபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணி கைது.


தர்மபுரி : நில வரைபடம் வழங்க, 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையைச் சேர்ந்தவர் பூபாலன்(45). இவரது தந்தைக்கு சொந்தமான நிலம், அன்னசாகரம் பகுதியில் உள்ளது. இந்நிலத்தை அவரது பெரியப்பா, தனக்கு சொந்தம் எனக் கூறி வந்தார். இதனால், நகராட்சியில் நில வரைபடம் வாங்க முடிவு செய்த பூபாலன், தர்மபுரி நகராட்சி நகர சார்பு ஆய்வாளர் மற்றும் சர்வேயர் சுப்பிரமணியிடம் விண்ணப்பம் செய்தார்.

கடந்த 15ம் தேதி வரைபடம் கேட்டு சென்ற போது, சுப்பிரமணி 600 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், உடனடியாக வரைபடம் கொடுப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பூபாலன், தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரைப்படி நேற்று மாலை தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் இருந்த சுப்பிரமணியிடம், 600 ரூபாயை லஞ்சமாக கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக