புதியவை :

Grab the widget  Tech Dreams

22 ஜூன் 2010

ராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது.


நாமக்கல் : ராசிபுரத்தில் ஜாதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நம்பத்ரி குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குறளரசன்(20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் வழங்கப்படும் உதவித்தொகைக்காக ஜாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் வழங்காமல் அதிகரிகள் இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு ஓப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் ரவி என்பவர் ரூபாய் 300 கொடுத்தால் ஜாதி சான்றிதழ் வாங்கி தருவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குறளரசன் சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ். பி., ரெங்கராஜிடம் புகார் செய்தார். ரெங்கராஜ் அறிவுரைப்படி குறளரசன் ரவியிடம் ரூ.300 கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ரெங்கராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய். 300 யும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக