புதியவை :

Grab the widget  Tech Dreams

03 ஜூன் 2010

மாத சம்பளம் ஆயிரம் :சொத்து மதிப்போ கோடி !


மும்பை : ஊழல் செய்து, "கோடிகளை' அள்ளுவதில், அரசியல்வாதிகள் மட்டும் தான் சூரர்கள் என, நீங்கள் கருதினால், அந்த கருத்தை உடனே மாற்றுங்கள். அரசு அதிகாரிகள் பலர், "பலே கில்லாடி'களாக உள்ளனர்.


மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தில், உயரமான கட்டடங்களுக்கு, அனுமதியளிக்கும் கமிட்டியில், மூத்த அதிகாரியாக பணிபுரிந்தவர், சைலேஷ் மகிம்துரா. கட்டட அனுமதிக்காக, லஞ்சம் பெற்ற போது, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

தானே முனிசிபல் அலுவலகத்தில், இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, சுனில் ஜோஷி, கான்ட்ராக்டர் ஒருவரிடமிருந்து, லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 18 லட்ச ரூபாய் ரொக்க பணம், 17 லட்ச ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள், ஆடம்பர பங்களா, பண்ணை வீடு உள்ளிட்ட பல கோடி மதிப்புடைய, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புனே பொதுப்பணி துறையில், இன்ஜினியராக இருந்த விக்ரம் ஜாதவ், கான்ராக்டர் ஒருவரிடமிருந்து, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், நடத்தப்பட்ட சோதனையில், ரொக்கமாக மட்டும், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாயும், 11 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு, பொதுப்பணி துறை இன்ஜினியரான மாருதி பால்கர், கான்ராக்டரிடமிருந்து, ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சிக்கினார். அவரிடமிருந்தும், கோடிக்கணக்கான மதிப்புடைய பணம், தங்கம், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவங்கள் அனைத்தும், மும்பை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மட்டுமே. ஒரு ஆண்டில் மட்டும், இப்பகுதிகளில், 389 அரசு அதிகாரிகள் பிடிபட்டனர். வருவாய் துறையில் மட்டும் 91 பேரும், கல்வித் துறையில், 18 பேரும், சுகாதாரத் துறையில், 13 பேரும் பிடிபட்டுள்ளனர். நாடு முழுவதும், இது போன்று ரெய்டு நடத்தினால், இந்திய பொருளாதாரம் பன்மடங்கு வளரும் வகையில், பண மூட்டைகளை பெறலாமென, வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக