புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

லஞ்ச பணத்தை தூக்கி எறிந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது






விருதுநகர் : லஞ்சம் வாங்கிய போது, போலீசாரைப் பார்த்ததும் பணத்தை கீழே வீசி தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர், திண்டுக்கலில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், சில நாட்களுக்கு முன், டிராக்டரில் மண் அள்ளும் போது, சிவகாசி ஆர்.ஐ., பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது பழனிச்சாமி, நடைச் சீட்டைக் காட்டினார். "இதை ஏற்க முடியாது; மாதம் ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும்' என, ஆர்.ஐ., வலியுறுத்தினார்.

இதுகுறித்து பழனிச்சாமி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு, சாட்சியாபுரம் ஆர்.ஐ., அலுவலகம் சென்ற பழனிச்சாமி, பாலசுப்பிரமணியனிடம், ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மற்றும் போலீசார், பாலசுப்பிரமணியத்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர், பணத்தைக் கீழே வீசி, போலீசாரையும் தள்ளி விட்டு, டூவீலரில் தப்பிச் சென்றார்.

அவருக்கு நெருக்கமான நபர் மூலம், அவரது மொபைலில் தொடர்பு கொண்ட போது, திண்டுக்கலில் உள்ள லாட்ஜில் இருப்பது தெரிந்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு, போலீசார் அவரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக