புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

கருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை

பெசன்ட்நகர் மயான பூமியில் பிணம் எரிக்க லஞ்சம்; ஊழியர் “சஸ்பெண்டு”

சென்னை மாநகராட்சி சார்பில் மயான பூமியில் எரியூட்டும் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பெசன்ட் நகர் மயானபூமி அழகுபடுத்தும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மயானபூமியில் நேற்று 8 எரியூட்டும் பணிகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் நேரிடையாக தொலைபேசி மூலம் எரியூட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தாரிடம் எரியூட்டும் பணிகளுக்காக மாநகராட்சி ஊழியர்கள் பணம் கேட்டார்களா? என்று கேட்டறிந்தார்.

அப்பொழுது பலர் எரியூட்டும் பணிகளுக்கு பணம் வழங்கியதாக புகார் தெரிவித்ததன் பேரில் உடனடியாக பெசன்ட் நகர் மயானபூமி பொறுப்பாளர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தார். 2 மயான உதவியாளர்களை பணிமாறுதல் செய்ய உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக