புதியவை :

Grab the widget  Tech Dreams

10 ஜூன் 2010

ஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி


ராஞ்சி:ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தில், முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, வழக்குப்பதிவு செய்ய அம்மாநில கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் அதிரடியால், ஊழல் அதிகாரிகள் கதிகலங்கி உள்ளனர்.ஜார்க்கண்டில், 2007-08 ம் ஆண்டு நடந்த அரசு பணியாளர் தேர்வில், பெரிய அளவில் மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. தேர்வாணைய தலைவராக இருந்த திலீப்குமார் பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்று கொண்டு, வேலை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதுகுறித்து, ஊழல் கண்காணிப்பு துறை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தேர்வுத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாணைய பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். புகார்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஊழல் கண்காணிப்பு பிரிவு, 19 ஊழல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.


இந்த நிலையில், ஊழல் அதிகாரிகள் மீது எப் .ஐ.ஆர்., பதிவு செய்ய, அம்மாநில கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசு துறையில், லஞ்ச லாவண்யம் தாண்டவமாடுகிறது. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊழல் அதிகாரிகள் மீது, கவர்னர் அதிரடி நடவடிக்கையை துவங்கியிருப்பது, மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக