புதியவை :

Grab the widget  Tech Dreams

17 ஜூன் 2010

கணவனின் மூக்கை அறுத்த பாசக்கார மனைவி


புழல் : நிலம் விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், தூங்கிக் கொண்டிருந்த கணவன் மூக்கை அரிவாள்மனையால் அறுத்த மனைவி கைது செய்யப்பட்டார்.

புழல் அடுத்த புத்தாகரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பத்மினி (42).

நெற்குன்றத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்டு சமீபத்தில் புத்தாகரம் பகுதிக்கு வந்துள்ளனர்.நிலம் விற்ற பணம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் சாமிக்கண்ணு தூங்கியுள்ளார்.

அப்போது, அங்கு அரிவாள் மனையுடன் சென்ற பத்மினி கணவனின் முகம், மூக்கு மற்றும் உதடுகளை அறுத்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த சாமிக்கண்ணு, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின்படி புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பத்மினியை கைது செய்து, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக