புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

பழநியில் நிலம் அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராஜேஸ்வரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(42). விவசாயி. இவரும்.இவரது நண்பர் குப்புச்சாமியும் சில ஆண்டுகளுக்கு முன் 3 ஏக்கர் நிலம் வாங்கினர்.

சொட்டு நீர்பாசனம் செய்வதற்கு தனிப்பட்டா தேவைப்படவே வருவாய்துறையிடம் மகாலிங்கம் மனு செய்தார். நிலத்தை அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சர்வேயர் ராஜேஸ்வரன் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் மகாலிங்கம் புகார் தந்தார்.

பணம் தருவதாக ராஜேஸ்வரனிடம் கூறுமாறு போலீசார் ஆலோசனை தந்தனர். அதன்படி மகாலிங்கம் பேசியபோது, தான் தங்கியுள்ள லாட்ஜிற்கு பணத்துடன் வருமாறு ராஜேஸ்வரன் கூறியுள்ளார். நேற்றிரவு லாட்ஜ் அறையில் ரூ. 8 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியபோது, டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சுந்தரராஜன் மற்றும் போலீசார் ராஜேஸ்வரனை கைது செய்தனர். சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக