புதியவை :

Grab the widget  Tech Dreams

22 ஜூன் 2010

ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கைது



செஞ்சி : செஞ்சியில் ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். செஞ்சி தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகோபாலன் மகன் கந்தன் (32). நந்தகோபாலன் கடந்த 1987ம் ஆண்டு அவரது விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார்.


மின் இணைப்பு வழங்க அவருக்கு இப்போது அரசு ஆணை வந்தது. இந்நிலையில் நந்தகோபாலன் நிலத்தை ஆய்வு செய்த செஞ்சி ஈச்சூர் மின் பிரிவு வணிக ஆய்வாளர் இளங்கோவன் ( 51) , கந்தனிடம் ரூ. 8000 லஞ்சம் கேட்டுள்ளார். 3 தவணைகளாக பணத்தை தருவதாக கூறிய கந்தன், நேற்று மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார்.


அவர்கள் கொடுத்த ரசாயனப் பொடி தடவிய ரூ. 3 500 பணத்தை இன்று காலையில் இளங்கோவனிடம் , கந்தன் கொடுத்தார். அப்போது போலீசார் இளங்கோவனை கையும் , களவுமாக கைது செய்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக