புதியவை :

Grab the widget  Tech Dreams

17 ஜூன் 2010

லஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கிய சேலம் கவுன்சிலர் .


சேலம்: குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் தர மறுத்த முதியவரை சற்றும் இரக்கமில்லாமல் தாக்கி காயப்படுத்தியுள்ளார் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியின் 29வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இவரை தியாகராஜன் என்ற முதியவர் குடிநீர் இணைப்பு பெறுவற்காக அணுகியுள்ளார்.

அப்போது முதியவரிடம் ரூ. 15,000 கொடுத்தால் இணைப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ளார் சுந்தரம். ஆனால் லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார் முதியவர் தியாகராஜன்.

இதனால் ஆத்திரமடைந்த கேபிள் சுந்தரம், முதியவர் தியாகராஜனை தாக்கி காயப்படுத்தி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த முதியவர் தியாகராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் கேபிள் சுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக