புதியவை :

Grab the widget  Tech Dreams

19 ஜூன் 2010

லஞ்சம் :இரண்டு பெண் அலுவலருக்கு சிறை தண்டனை.


திருச்சி: திருச்சி அருகே திருமண நிதியுதவி வழங்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட இரண்டு பெண் அலுவலர்களுக்கும் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள மாவிலிப்பட்டியைச் சேர்ந்த ஜெயலட்சுமி அரசின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வாங்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அரசின் நிதியை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தா.பேட்டை பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர் கமலம் மற்றும் ஊரக நகர்நல அலுவலர் அங்காயி ஆகியோர் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணை முடிந்த நேற்று முன்தினம் நீதிபதி ராஜசேகரனால் தீர்ப்பளிக்கப்பட்டது.

லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அலுவலர் அங்காயி ,கமலத்துக்கு தலா இரண்டாண்டு சிறையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக