புதியவை :

Grab the widget  Tech Dreams

14 ஜூன் 2010

இதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றவர்கள் .


மங்களூர்:துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்- இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.


துபாயில் இருந்து மங்களூருக்கு கடந்த மாதம் 22ம் தேதி அதிகாலை வந்த ஏர்- இந்தியா விமானம் தரை இறங்கும்போது, ஓடுபாதையை தாண்டிச்சென்று, பள்ளத்தாக்குப் பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 158 பேர் உடல் கருகி இறந்தனர்.இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டனர். இவர்களில் சிலர், இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மங்களூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.


இவ்வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு சத்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய கூட்டாளியான மங்களூர் ஜொக்காடு பகுதியை சேர்ந்த இர்ஷாத்(21) என்பவரை கைது செய்தனர்.இவர் மங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேபாள நாட்டைச் சேர்ந்த இவரும், சத்தாரும், மற்றொரு நபரான அல்டாப் என்பவரும் சேர்ந்து இறந்தவர்கள் அணிந்திருந்த 32 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.


இவற்றில் பலவற்றை பதுக்கி வைத்துவிட்டு சில நகைகளை மட்டும் விற்பதற்காக நகைக் கடைக்கு சென்றபோதுதான் போலீசில் சிக்கினர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அல்டாப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக