புதியவை :

Grab the widget  Tech Dreams

25 ஜூன் 2010

விவசாயியிடம் லஞ்சம்: விஏஓ கைது


நாமக்கல், ஜூன் 24: சிட்டா அடங்கல் நகல் வழங்குவதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெரப்பஞ்சோலையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கார்கூடல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் தனது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்பு பயிருக்கு கடன் வாங்குவதற்காக சிட்டா அடங்கல் நகல் பெற வேண்டியிருந்தது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை அணுகியுள்ளார் பாலச்சந்திரன். ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சிட்டா அடங்கல் நகல் வழங்க முடியும் எனக் கூறியுள்ளார் முருகேசன்.

இது தொடர்பாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார் பாலச்சந்திரன். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை தண்ணீர்பந்தல்காடு பேருந்து நிறுத்தம் அருகே சந்தித்து ரூ. 3 ஆயிரத்தை கொடுத்துள்ளார் பாலச்சந்திரன். அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டை நோக்கி வந்த முருகேசனை லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, பாலச்சந்திரன் அளித்த ரூ. 3 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை கைது செய்து நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மீது வழக்குப் பதிவு செய்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவலில் அடைத்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக