புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் : 4 பேர் சஸ்பெண்டு



பொள்ளாச்சியில் உடுமலை ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏழைகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களிடம் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நர்சுகள் லஞ்சம் கேட்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து குவிந்தன.

அதன் பேரில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நல பணியாளர்கள் துறை கூடுதல் இயக்குனர் புருசோத்தம் விஜயகுமார் மற்றும் 11 பேர் இன்று காலை 7.30 மணிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அப்போது நர்சு மற்றும் ஊழியர்கள் வெளிப்படையாகவே நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு பெறுவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நோயாளிகள் போல் வந்த மருத்துவத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட ஊழியர்கள் 3 பேரையும், ஒரு நர்சையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அடுத்த கட்டமாக அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார்கள். லஞ்சம் வாங்கிய 4 பேரையும் “சஸ்பெண்டு” செய்து உத்தரவிட்டனர்.

சில நர்சுகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியை விட்டு விட்டு மாற்று பணியிலும் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். மொத்தம் 4 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அதன் பின்னர் கூடுதல் இயக்குனர் புருசோத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறும்போது தமிழ்நாடு முழுவதும் இந்த சோதனை நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

பெருந்துறையில் நடந்த சோதனையில் ஒரு டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மற்ற இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக