புதியவை :

Grab the widget  Tech Dreams

31 மே 2010

லஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .




செய்யூர்: செய்யூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன்(60). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விதிமுறைப்படி செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.

மனு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுகுப்பத்தைச் சேர்ந்த சர்வேயர் சேகரிடம்(48) விசாரணைக்கு சென்றது. அவர் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

விருப்பம் இல்லாத குணசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், வெங்கடேசன், சரவணன் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் நோட்டுகளை குணசேகரின் சர்வேயர் சேகரிடம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக