புதியவை :

Grab the widget  Tech Dreams

13 மே 2010

அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு : 2 பேர் கைது


சென்னை அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., சரஸ்வதி தலைமையில் நடந்த அதிரடி ரெய்டு நடந்தது.

இதில் அலுவலகத்தில் புரோக்கர்களாக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சார்பதிவாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் கணக்கில் வராத ரூ. 3500 கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக