புதியவை :

Grab the widget  Tech Dreams

11 மே 2010

ரூ.700 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது


மதுரை:மதுரையில் மகப்பேறு திட்டத்தில் நிதியுதவி வழங்க, 700 ரூபாய் லஞ்சம் வாங்கிய நர்ஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் கங்காலட்சுமி (44). பைகாராவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றுகிறார். அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய் வழங்க, இவர் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொற்செல்வி என்பவருக்கு நிதியுதவி வழங்க, கங்காலட்சுமி 700 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று காலை 11.30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொற்செல்வி யிடமிருந்து லஞ்சம் பெற்ற கங்காலட்சுமியை, டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, நான்கு பேரிடம் லஞ்சம் வாங்கி வைத்திருந்த 3,200 ரூபாயையும், அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக