புதியவை :

Grab the widget  Tech Dreams

04 மே 2010

லஞ்ச வழக்கில் விருதுநகர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் சிக்கிய விருதுநகர் வட்டாட்சியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.​ ​ ​

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறையின் வட்டாட்சியராகப் பணிபுரிந்தவர் சதானந்தம் ​(58).இவர் 2007 ஆம் ஆண்டு சாத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்தார்.

அப்போது நல்லிகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்திருந்தாராம்.​ சான்றிதழ் வழங்க சதானந்தம் லஞ்சம் கேட்டாராம்.​ ​ ​

இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.லஞ்ச ஒழிப்புப்
போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினராம்.​ ​ ​ அவர்,​​ வட்டாட்சியர் சதானந்தத்திடம் பணத்தைக் கொடுக்கும்போது,​​ அவரைக் கைது செய்தனர்.​

அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.​ பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.​ ​ இதையடுத்து,​​ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணியில் மீண்டும் சேர்ந்தார்.​ ​


அவர் விருதுநகரில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை வட்டாட்சியராகப் ​ பணிபுரிந்து வந்துள்ளார்.​ இந்த நிலையில்,​​ அவர் ஏப்ரல் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார்.​ ​ ​ ஆனால்,​​ ஏப்ரல் 29 ஆம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் ​ உத்தரவிட்டுள்ளது.​ ​ ​ லஞ்ச ஒழிப்புப் போலீ
சாரால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால்,​​ அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக