புதியவை :

Grab the widget  Tech Dreams

18 மே 2010

ஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


வெளிமாநிலங்களில் இருந்து தமிழகஎல்லைக்குள் வரும் வாகனங்களை சோதனை நடத்த ஜூஜூவாடியில் சோதனை சாவடி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதன் மூலம் வருமானம் அதிகமாக உள்ளது.

இதில் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து லஞ்சஒழிப்பு துறை போலீசார் அடிக்கடி திடீர்சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில்வராத பணம் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 113 பணம் கைப்பற்றப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் தனபால், மற்றும் புரோக்கர்கள் சுனில்குமார், ராஜீவ், சரவணன், ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக