புதியவை :

Grab the widget  Tech Dreams

27 மே 2010

கோவை - யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி மோசடி:மேனேஜர் மீது வழக்கு


கோவை:தனியார் எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கிளை மேலாளர் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் "யு.ஏ.இ., எக்சேஞ்சு அண்டு பாரின் சர்வீஸ்' எனும் நிறுவனம் செயல்படுகிறது. வெளிநாட்டு பணத்தை, உள்நாட்டு பணமாக மாற்றி தருதல், விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டசேவைகளைமேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் இங்கு தணிக்கை நடந்தது. அதில், போலியான கணக்கு துவக்கப்பட்டு, 1.18 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.

இம்மோசடி குறித்து, தஞ்சையிலுள்ள யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவன மண்டல மேலாளர் கார்த்திகேயன், கோவை மாநகர் குற்றபிரிவில் புகார் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக